ரூ.11.81 கோடியில் இரு மேம்பாலம்
மக்கள் மனதில் மகிழ்ச்சி வெள்ளம்
சூலுார்: அவிநாசி ரோட்டை கடக்க பல கி.மீ., சுற்றி வந்த, கிராம மக்களின் வேதனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இரு மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.தேசிய நெடுஞ்சாலையான அவிநாசி ரோடு (என்.எச்., 544) செங்கப்பள்ளி முதல் வாளையாறு வரை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. கணியூர், செல்லப்பம்பாளையம், ஊஞ்சப்பாளையம் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்பட்டதால், ரோட்டின் இரு பகுதிகளில் உள்ள கிராம மக்கள், எந்த பிரச்னையும் இல்லாமல் ஆறு வழிச்சாலையை கடக்கின்றனர்.6 கி.மீ., சுற்றுஆனால், கொள்ளுப்பாளையம், ஊத்துப்பாளையம், சங்கோதிபாளையம் உள்ளிட மூன்று கிராம மக்கள் மட்டும், ரோட்டை கடக்க முடியாமல், 6 கி.மீ., சுற்றி வர வேண்டிய நிலை இருந்தது. இதனால், பல ஆண்டுகளாக மக்கள், தொழிலாளர்கள், மாணவ, மாணவியர் அவதிப்பட்டு வந்தனர். இப்பகுதி மக்களின் பிரச்னை குறித்து, பா.ஜ., நிர்வாகி முருகேசன், செல்வராஜ் மற்றும் கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்திருந்தனர்.கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி அளித்து, இரு பாலங்கள் கட்ட, ரூ.11.81 கோடி நிதி ஒதுக்கியது. மண் பரிசோதனை முடிந்து, பாலங்கள் கட்ட, நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட இயக்குனர் சிவக்குமார், பா.ஜ., மாநில செயலாளர் நந்தகுமார், மாவட்ட தலைவர் மோகன் மந்திராஜலம், மாவட்ட நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, செந்தில்குமார், கோபால்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு பணிகள் வேகமாக துவங்கியுள்ளதால், மக்களின் மனதில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.கோழிப்பண்ணை அருகே, ரூ.10.56 கோடி செலவில், மேம்பாலம் கட்டப்படுகிறது. கொள்ளுப்பாளையம் பிரிவு அருகே வாகனங்கள் மேலே ஏறி, தனியார் பங்க் அருகே கீழே இறங்கி செல்லும்படி பாலம் அமைகிறது.ஊத்துப்பாளையம் பிரிவில், ரூ.1.25 கோடி செலவில் இரும்பிலான நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இரு பாலங்கள் அமைவதால், விபத்துகளும் இப்பகுதியில் குறையும்.
அரசூர்ஊராட்சி "கோழிப்பண்ணை"-பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் கோரிக்கை தொடர்பாக. பா.ஜ.க மாவட்ட பிரதிநிதியும் ,சமூகசெயற்பாட்டாளருமாகிய திரு.ஜெய்கிந்த் முருகேசன்.அவர்கள் மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர்.பொன்.ராதாகிருஷ்ணன்- அவர்களை நேரில் சந்தித்து மேற்படி கோரிக்கை மனுவை வழங்கி, கோரிக்கை தொடர்பாக விளக்கிப்பேசிய போது எடுத்தப்படங்கள்...
மக்கள் மனதில் மகிழ்ச்சி வெள்ளம்
சூலுார்: அவிநாசி ரோட்டை கடக்க பல கி.மீ., சுற்றி வந்த, கிராம மக்களின் வேதனையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இரு மேம்பாலங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.தேசிய நெடுஞ்சாலையான அவிநாசி ரோடு (என்.எச்., 544) செங்கப்பள்ளி முதல் வாளையாறு வரை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. கணியூர், செல்லப்பம்பாளையம், ஊஞ்சப்பாளையம் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்பட்டதால், ரோட்டின் இரு பகுதிகளில் உள்ள கிராம மக்கள், எந்த பிரச்னையும் இல்லாமல் ஆறு வழிச்சாலையை கடக்கின்றனர்.6 கி.மீ., சுற்றுஆனால், கொள்ளுப்பாளையம், ஊத்துப்பாளையம், சங்கோதிபாளையம் உள்ளிட மூன்று கிராம மக்கள் மட்டும், ரோட்டை கடக்க முடியாமல், 6 கி.மீ., சுற்றி வர வேண்டிய நிலை இருந்தது. இதனால், பல ஆண்டுகளாக மக்கள், தொழிலாளர்கள், மாணவ, மாணவியர் அவதிப்பட்டு வந்தனர். இப்பகுதி மக்களின் பிரச்னை குறித்து, பா.ஜ., நிர்வாகி முருகேசன், செல்வராஜ் மற்றும் கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்திருந்தனர்.கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு உறுதி அளித்து, இரு பாலங்கள் கட்ட, ரூ.11.81 கோடி நிதி ஒதுக்கியது. மண் பரிசோதனை முடிந்து, பாலங்கள் கட்ட, நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட இயக்குனர் சிவக்குமார், பா.ஜ., மாநில செயலாளர் நந்தகுமார், மாவட்ட தலைவர் மோகன் மந்திராஜலம், மாவட்ட நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, செந்தில்குமார், கோபால்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு பணிகள் வேகமாக துவங்கியுள்ளதால், மக்களின் மனதில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.கோழிப்பண்ணை அருகே, ரூ.10.56 கோடி செலவில், மேம்பாலம் கட்டப்படுகிறது. கொள்ளுப்பாளையம் பிரிவு அருகே வாகனங்கள் மேலே ஏறி, தனியார் பங்க் அருகே கீழே இறங்கி செல்லும்படி பாலம் அமைகிறது.ஊத்துப்பாளையம் பிரிவில், ரூ.1.25 கோடி செலவில் இரும்பிலான நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இரு பாலங்கள் அமைவதால், விபத்துகளும் இப்பகுதியில் குறையும்.
அரசூர்ஊராட்சி "கோழிப்பண்ணை"-பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் கோரிக்கை தொடர்பாக. பா.ஜ.க மாவட்ட பிரதிநிதியும் ,சமூகசெயற்பாட்டாளருமாகிய திரு.ஜெய்கிந்த் முருகேசன்.அவர்கள் மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர்.பொன்.ராதாகிருஷ்ணன்- அவர்களை நேரில் சந்தித்து மேற்படி கோரிக்கை மனுவை வழங்கி, கோரிக்கை தொடர்பாக விளக்கிப்பேசிய போது எடுத்தப்படங்கள்...